திங்கள், 4 மார்ச், 2013

கல்யாண்ஜியின் கவிதை நூல் ”மீனைப் போல் இருக்கிற மீன்” குறித்து- முதல் பாகம்


மீனைப் போல இருக்கிற மீன்

கல்யாண்ஜியின் கவிதை நூல் பற்றி

 

உயிருடன் வாழும் இளமைப்பருவம்

 

இளஞ்சேரல்

   

 

 புகழ் பெற்ற சினிமா ஸ்டுடியோவான சென்டல் ஸ்டுடியோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள். கல்பனா. அச்சில் எழுபதுகளின் வாணிஸ்ரீ. ஒன்பது மணி வெளிச்சம். நிழற்குடையில் பணிநிமித்தமாக அவசரம் சுட்டுப் போட தகித்து நிற்கிறார்கள் மக்கள். அவசர மற்றவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. குழந்தைகள் பெற்றோர்கள் தவிர்க்கும் பேருந்துகளில் ஏறிப்போக ஆசைப்படுகிறது.

        அடைந்து உப்பி வரும் பேருந்துகள். அடுத்தது அடுத்தது என்று விட்டுப்பிடித்ததில் நிழல் நீளமாய் வடிந்திருக்கிறது.அவளை வருகிறாயா என்று சற்று வேகம் குறைந்த  இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்ததில் காரணமிருக்கிறது. திருமணப் பேச்சைத் தவிர்ப்பதில் காரணம் இருக்கிறது. மூன்று வருடம் மாதாமாத தவனைகள் கட்டிவிட்டால் மனை ஒன்று சொந்தமாகிவிடும். நினைவு தெரிந்த நாளிலிருந்து 26 வருடங்களாக வாடகை தந்து தந்து கை சிவந்து விட்டது. வருமானம் ஆறாயிரம் ருபாயில் பேருந்து பூ வாங்குவது தவிர அவள் வேறெந்த செலவும் இல்லை. சொகுசுப் பேருந்து அவள் பட்ஜெட்டில் இல்லை. ஆனும் இன்று முகூர்த்த நாள் வேறு. சரியான கூட்டமாக இருக்கிறது என்று நிழற்குடை மக்கள் பேசுகிறார்கள். பட்டுச் சேலை அணிந்ததால் பால் அருந்துவதற்கு சிரமப்படும் குழந்தைகளும் சீக்கிரம் வீடு போய்ச் சேர்வதற்கு அவசரம் கொள்கிறார்கள்.

       வெயில் சூடாவதைத் தணிக்கிறது இன்னும் மீதமிருக்கும் பனி. இனி வரும் பேருந்தி்ல் ஏறிக் கொள்ளத்தான் வேண்டும். சொகுசு வண்டி நெடு சேரமான பயணிகள் ஏறுவதற்கு வசதியாக காலியாக இருக்கும் இடங்களை நிரப்பவும் காத்திருக்க ஏறிக்கொள்கிறாள். பிஸ்கட் நிறத்தில் பூப் போட்ட சுரிதார். அளவான உயரம்.மாநிறத்தில் தமிழ்க் குடும்பத்தின் உயரம். அலைபேசியில் வந்து குவியும் கவிதைகளை அவள் இப்பொழுதெல்லாம் அழிப்பதில்லை. வாசிக்கிறாள்.

        அலுவலகம் வந்து சேர்ந்தாள். இன்னும் யாரும் வரவில்லை. விளக்கு மந்தமாக எரிந்து கொண்டிருக்கிறது. பெருக்கிக் கொண்டிருப் பவர்களுக்கு உதவுவதற்காக வெளியிலியே நின்று கொள்கிறாள்.

        தற்சமயம் சூலூர் ஜாதகம் பொருந்தியிருப்பதாகவும் தரகர் நச்சரிப்பும் அம்மா விடாப்பிடியாகக் என்ன சொல்கிறாய் என்று மூன்று மாதமாகக் காத்திருக்கிறார்கள். கல்பனாவிற்குக் கல்யாணம் குறித்த சிந்தனையை யாரும் சொல்ல வேண்டாம். கைக்குழந்தைப் பெண்களைப் பார்த்தால் போதும். உடனே ஜாதகம் கொடுத்த இடமெல்லாம் ஞாபகம் வரும். கைப்பையிலிருக்கும் தனக்குப் பிடித்த பொருந்திய ஜாதகத்தை எடுத்து அந்த தொடர்பு அலைபேசி எண்ணுக்கு முயற்சிக்கிறாள்.                    பையன் சுமார். குடும்பம் பரவாயில்லை.  இருபது கிலோமீட்டர் சுற்று அதிக தொலைவில்லை.

    மணி ஒலிக்கிறது. எடுத்தவர் தரகர். விசாரிக்கிறாள். தன் அம்மா வழி உறவினரும் கூட. விசாரிப்பு முடிந்து  அந்த சூலூர் ஜாதகம் குடுத்தி ருந்தீங்க. நாங்க பார்த்தோம்..நல்லாயிருக்கு..அம்மா அவங்களுக்கு டைம் இருந்தா வந்து பாக்கச் சொன்னாங்க“ என்றாள்.

          மறுமுனையிலிருந்து தரகர். அந்த இடமா அது முடிஞ்சிருச்சே..நான் அவ்வளவு தூரம் உங்கம்மா கிட்ட தலையிலடச்சு சொன்னேன். கேட்கலை. சரிம்மா..வேற ஜாதகம் பொருந்தரது கிடைச்சா போன் பண்றேன்.“

   “அம்மா மேல பழி சொல்லாதீங்க..“சொல்ல நினைத்து அமைதியாகி விட்டாள்..கல்பனா..

 

                                  இப்படித்தான்..

 

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறார்கள்

இவர்கள்

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறேன்

நான்

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறது

இந்த

ரொம்ப காலம்பக் -51

 

     ஸ்டெபியின் கணவன் இறந்த போது குழந்தைக்கு இரண்டரை வயது. ஒரே மகள் என்பதால் தகப்பனுக்கு அவள்தான் இறுதி காரியங்களைச் செய்தாள். சர்ச்சில் யாரும் அழவில்லை. அல்லது அழ யாருக்கும் அழுகை மிச்சம் மீதியில்லை. கர்த்தரே. உன் பாஷையில் சொல்வதானால் “ஊழிக்காலம் முடிந்ததும் அவர் அழைத்துக் கொள்ளப்ட்டார்“ என்பீரே.அப்படியா. சரி ஆண்டவரே அப்படியானால் எம்மை எதற்று விட்டு வைத்தீர்..என்றுதான் இரண்டு நாட்களாக தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.தேவாலயத்தில் வைத்து அவருக்கான பிரார்த்தனை முடிந்து நல்லடக்கம் நிகழ்ந்தது. முதலில் அவர் இந்துவாக இருந்ததின் காரணத்தினால் அவருக்கும் இந்து மத வழக்கப்படியும் கணவரின் குடும்பத்தார் விரும்பியதால் அவர்களின் சடங்குகளும் செய்யப்பட்டது. ஸ்டெபி தன் கணவனை தன் தேவனின் கிருபையுடன் நல்லடக்கம் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் நடந்ததைக் காரணம் காட்டி அப்படியே போய்க்கோ என்று உறவினர்கள் வெளியேறிவிட்டார்கள்.

        கணவன் பார்த்த வேலை கருணையின் அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. பணி உத்தரவின் படி பணியில் இணைந்த போது வாயிலிருந்த கர்த்தர் படம் பார்த்து. ஆண்டவரே எலலாம் உன் பிரியம் என்று பிராத்தித்துக் கொண்டு முதல் நாளின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்ட போது கணவனின் முதலெழுத்துக்கள் அங்கு ஏற்கென இருந்தது சில நாட்களின்  கட்டங்களில்.

அவன் வாழ்ந்த நாட்களும் காலமும் இங்குள்ளதா ஆண்டவரே. அப்படியே ஆனாலும் அவருடன் வாழ்ந்து கொள்கிற வாய்ப்பு அளித்த ஆண்டவருக்கு என் நன்றிகள். குழந்தையை யாரிடம் விட்டு வருவது எனத் தோன்றிய போது அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை வரை கூடவே அழைத்து வாம்மா பிறகு அன்று குழந்தையைப் பள்ளியில் சேர்த்து விடு. இனி யென்ன மூன்று மாதம் தானே என ஆறுதல் அளித்தார்கள்.

        ஸ்டெபியைத் மறுமணமாகத் திருமணம் செய்து கொள்வதற்கு வந்த வாய்ப்புகளைக் கடுமையாக மறுத்தாள். மகளின் எதிர்காலமே என் வாழ்க்கை. உனக்கான உடலாகவோ அன்றி உனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான தாயாக இருக்கப் போவது எல்லாம் ஒரு கனவு. நான் வறியவள். ஆண்டவரின் முடிவு. என்றாள்.

        மகள் பூப்பெய்த செய்தி கேட்டு மலர்ச்சியுற்றாள். நெடுங்காலத்திற்குப் பிறகு தன் கணவனின் பிறிவு நினைத்து வருந்தினாள். தன் மகள் குறித்து அவன் பேசிய கதைகளையெல்லாம் நினைத்து நினைத்து பைத்தியகாரிமாதிரி சிரிப்பாள். மகளோ “என்னம்மா வாயமூடறயா என்ன சொல்றே“ என்று வாயைப் பொத்துவாள். அவளுக்கு இப்போது புரிந்து கொண்ட வயசு. அப்பா பற்றிய உரையாடல்களைக் கேட்டுக் கொள்ளும் போது சுவராசியமான தகவல்களையே சொல்வாள் சிலவை புனைவாகவே இருக்கும்.

        பிற்பாடு கர்த்தர் நம்மை அழைத்துக் கொள்ளும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும் என்று தைரியம் சொல்லி கவனத்தை திசை திருப்புவாள். பிள்ளை ருதுவானதும் கணவனின் குடும்பத்தார் வந்து சீராட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்து மத வழக்கப்படியான சீர்கள் செய்ததை தடுக்க முடியவில்லை. மகளுக்கு ஏதோ புது சந்தோசம்.

அவளிடம் நிறைய மாற்றங்கள். ஸ்டெபிக்கு கொஞ்சம் உள்ளுர பயந்தாலும் எப்படி மகிழ்வு கொள்கிறாள். பார்க்கும் போது “இது போதும் ஆண்டவரே அவள் சந்தோசத்தை நான் கண் குளிரக் கண்டு விட்டேன். இனி நீவிர் எப்போது அழைத்தாலும் வருகிறேன்..“எனப் பிரார்த்திக்கிறாள்.

                 மகள்.மலர்கள் சூடி வந்தால் எடுத்து வெளியில் வீசப் பற்றும் போது உடல் கப் என்று பற்றி எரிவதை உணர ஆரம்பித்தாள். கணவன் உறவுக்காரர்கள் ஒட்டி உறவாட ஆரம்பித்த பிறகு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் அவர்களுடன் மகள் உறவாடத் துவங்கியது கண்டு தன்னிடமிருந்து முற்றாகப் பிரிந்து கொள்வாளோ என்ற பதற்றமும் அதிகரிக்கவே செய்தது.

      இலையுதிர்காலத்திற்குப் பிறகு பொழிந்த மழை உலகைக் குளிர்வித்து சோலைவனமாகிறது. மலர்களும் மலர்களுக்கான உலகத்தையும் உயிர்விக்கத் துவங்கிடுகிறது.. மகள் கல்லூரிப் படிப்பை முடித்தாள். ஏறக்குறைய அவள் அப்பாவின் உறவுக்காரர்களுடன் ஒருத்தியாகவே மாறியிருந்தார்.

ஜாதகம் பார்க்க ஆரம்பித்ததை அரசல் புரசலாகத் தகவல்களைப் பெற்றவளிடம் நேரடியாகவே வீடு வந்து பேசினார்கள்.

ஸ்டெபி மறுக்க முடியவில்லை. இவர்கள் யார் என் மகளுக்கு வரண் பார்க்க. தன்னந்தனியாக சிரமப்பட்ட போது யார் வந்து ஆதரித்தார்கள். தவிக்க விட்டவர்கள் தானே என்று சமயம் பார்த்து பேசத் தோன்றவில்லை.காரணம் மகளுக்கும் அவர்களுடனான பரிச்சயத்தை விரும்புகிறாள். முழுக்கவும் இந்துப் பெண்ணாகவே மாறிவிட்டிருந்தாள். நாம் ஏதாவது சொல்லப் போய் அவள் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது.

         “நல்ல வேலை நல்ல பையன் நல்ல குடும்பம் விடறதுக்கு மனசில்லையம்மா..நீ என்ன நினைக்கிறாய்.“

“நான் என்ன நினைப்பது பற்றி கவலையில்லை கர்த்தர் என்ன நினைத்திருக்கிறார். தெரிய வில்லை“என்று பேச நினைத்தவள் அமைதியாகி விட்டாள். மகளிடம் விவரத்தைக் கேட்ட போது வெட்கப்பட்டது ஸ்டெபிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவளுடன் அதிகமான உரையாடல்கள் நின்று வி்ட்டது.

      கணவன் வீட்டாரை மோசம் சொல்ல முடியாது. ஸ்டெபி நினைத்திருந்தாலும் இத்தனை படோபடமாகத் திருமணத்தை நடத்தியிருக்க முடியாது. அவள் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்க முடியவில்லை.மகள் சங்கடப்படக் கூடாது என்பதற்காக எல்லா சடங்குகளிலும் பங்கு கொண்டாள். அவள் பாதபூசை செய்த போது அவளைக் குழந்தையாக இருந்து குளிப்பாட்டிய சிலிர்ப்பு இருந்தது. கர்த்தரே நீர் எம்மைக் கைவிட வே இல்லை. தாலி கட்டப்படும்போதும் கர்த்தரே நீவிர் என்னைக் கைவிடாதீர் என்று பிராத்தித்தாள்.

       மறு வீடு போகும் போது ஸ்டெபியை அணைத்துக் கொண்டாள். அவள் எல்லா இழப்பையும் மறைத்துக் கல் போன்று நின்று வழியனுப்பி வைத்தாள். ஒரு வாரம் புகுந்த வீடு பிறந்த வீடு என உறவுகளின் அலைக்கழிச்சல் நிகழந்து ஒரு நாள் மகள் அழைத்தாள்..அம்மா நீயும் என் கூட வந்திரும்மா..தனியா என்ன பண்ணப் போற..எனக் கேட்டபோதுதான் தனிமையை உணர்ந்தாள். புதுமணத்தம்பதிகள் நீடுடி வாழ்க..

   “என்னப் பத்திக் கவலைப்படாதே கர்த்தர் என்னைக் கைவிடமாட்டார்“

 

 

தேவன்-ஈசன்- தூதன்

 

என் தேவன் என்னை

புறாவாகப் படைத்திருக்கலாம்

கூட்டாகப் பறந்து

கூட்டமாக இறங்கி

தனித்தனித் தானியம் பொறுக்குவேன்

ஈசன் என்னை

சருகாக உதிர்த்திருக்கலாம்

வேம்பு,புங்கை,குல் மோஹர் எனும்

வேற்றுமையின்றி எரிந்திருப்பேன் கூளமாக

இறைத்தூதன் என்னை

எறும்பாக அனுப்பியிருக்கலாம்

நந்தியாவட்டைக் கிளை மீதும்

மரமல்லிப் பூ மீதும்

நகர்ந்திருப்பேன் அன்றன்றைய

வெயில் உறிஞ்சி

சாப்பாட்டு மேஜையில் பழக்கிண்ணங்கள்

கண்காணிப்புக் கண்களுடன் நெடுஞ்சுவர்கள்

கதவுத் தாழ்கள் நனையாத் தூரத்தில்

கடும் மழை

நெடுந்தொடர் பார்த்தபடி நான்-  பக் -42

 

        ரெஜினாவைத்  தவிர்க்க நினைத்து இரண்டொரு நாட்களாக அவளிடம் பேசுவதில்லை சண்முகம். திடீரென்று உறவைத்துண்டித்தால் சந்தேகம் வரும் என்பதால் கடந்த ஒரு மாதமாகக் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் தொடர்புகளை எல்லாம் தவிர்த்தான். அதற்குத் தகுந்தது போலவே அவளுடனான தொடர்பு அதிகமானதை அறிந்தான்.

ஒரு வேளை தாம் விலக நினைப்பதைக் கண்டு கொண்டு விட்டாளோ என்னவோ. ஏதாவது ஒரு காரணத்தை தயாராக வைத்து சமாளித்தான்.

        அன்று காலை அலுவலகத்திற்கே வந்து விட்டாள். ஏதுமறியாதவன் போன்று  அனுமதி பெற்று வெளியே வந்து “என்ன பேங்க் வந்தியா

இல்ல உன்னப் பார்க்கதான் வந்தேன்.

“என்ன விசயம்

நீ என்னக் கட் பண்ண நெனைக்கற இல்ல

என்ன பேசற..அப்படியெல்லாம் கிடையாது“

“ஷ்யுர்

ம்..ஷ்யுர்..

பொய்..பரவாயில்லை..பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போலம்னுதான் வந்தேன். பை..

    இது நடந்து ஒரு வாரம் சண்முகம் விடாமல் தொடர்பு கொண்டபோது அவள் சரியாக அனுசரிக்க வில்லை. நம்மால் ஒரு வாரமே தாங்க முடியவில்லயே ஒரு மாதமாக எப்படி சிரமப்பட்டிருப்பாள் என்பது உரைத்தது.

         மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நட்பு மணம் வரைக்கும் இறுதியாக வந்து சேர்வது போலிருந்தது. ஒரு விபத்தில் தன் பெற்றோரை இழந்த சண்முகம் படித்து ஒரு கணணி பொறியாளனாக புகழ்பெற்ற மருத்துவமனையில் பணிக்காக வந்தபோதுதான் ரஜினாவைச் சந்தித்தான்.

ரஜினா அவனுடைய தனிமைப் பிரியத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் கிண்டல் செய்யத் துவங்கி பின்பு நேசமாக மலர்ந்தது.

        அவனுடைய ரஜினா நேசத்தை நண்பர்கள் எச்சரித்தார்கள். “பாத்து பழகுடா..மாட்னன்னு வை .முடிச்சிருவாங்க..அதுவும் இந்த விசயத்தில ரொம்ப ஜாக்கிரதை விட்ரு“ எச்சரித்ததின் விளைவாகவே அவளைத் தவிர்க்க நினைத்தது நடக்கவில்லை. அவள் பேச்சு வாக்கில் நான் உன்ன விட குண்டா இருக்கன்னு தானே என்னக் கழட்டிவிடபாக்கற என்ற போதுதான் அவள் மீது நேசம் அதிமானது.

       அவள் அறிவுறுத்திய படியே தைரியமாக அவள் சமயப் பெரியவர்களிடம் சந்தித்துப் பேசினான். அவர்களுடன் இருந்த இளைஞர்கள் திமிறிய போது பெரியவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.“உன்ன எப்படி நம்பறது என்றார்கள்.

“நீங்க கடவுள நம்பற அளவிற்கு என்ன நம்பலாம் என்றான். பிறகு புனித நூல் மீது ஆனையாக அவள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தினான். அவர்கள் முன்பு மண்டியிட்டு வணங்கி வெளியே வந்தபோது ரஜினாவின் சந்தோசம் எல்லையில்லாமல் பீறிட்டதை உணர்ந்தான்.

          திருமண ஏற்பாடுகள் மிகவும் எளிமையாக நடந்தது. ரஜினாவின் பெற்றோர்கள் கடுமையாக நடந்து கொண்டாலும் அவளுக்காக விட்டுக்கொடுத்தார்கள்.

     ஒரு நாள் தன் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சண்முகம் தன் பெற்றோர்களின் திருமணப் பத்திரிக்கையைக் கண்டெடுத்தவன் ஆனந்தமும் அளப்பரியா மகிழ்வும் கொண்டான். நடந்தவைகள் திரும்பவும் கண் முன் வந்து போனது. தன் அப்பா வகை குடும்பத்து நண்பர்கள் ஆசையாக அப்பா அம்மா திருமணம் நடந்த அதே மலைக்கோயிலில் நீ உன் திருமணம் நடக்க வேண்டும் ஆசைப் படுகிறோம் என்றது நினைவுக்கு வந்து தொலைத்தது.

       ரெஜினா சமய வழக்கப்படி எளிமையாக திருமணம் நடந்தது. எளிய வரவேற்பு விருந்து நடைபெற்றது. அதிகமாக யாரும் அழைக்கப்பட வில்லை.

          சண்முகம் தன் ஆசையை ரெஜினாவிடம் தெரிவித்தான். முதன் முதலில் தம்பதி சமேதரமாக வெளியில் போகிறோம் அவளுக்கு மறுக்கப் பிரியமில்லை. அதிகாலையில் கார் மலைக் கோயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அவன் தன் அப்பா அம்மா கதைகளைப் பேசியபடியே வந்தான்.ரெஜினா தன் அப்பா அம்மா கதைகளைத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தாள்.

        மலைக் கோவில் வந்து சேர்ந்தது. அங்கு ஏற்கெனவே சில திருமண வைபவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எங்கினும் கல்யாண மகிழ்ச்சி..குழந்தைகளின் புத்தாடைகளின் மணம். பட்டுப்புடவைகளின் சரசரப்பு..மங்கல இசை. பக்தி பாடல்கள்.. முகூர்த்த நேரங்களின் படி கோயில் பூசாரியால் ஒவ்வொரு மணமக்களாக அழைக்கப்பட்டு கெட்டி மேளம் முழங்க தாலிகட்டும் நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

         சண்முகம் ரெஜினா தம்பதிகள் அவர்களுடன் தாலி கட்டிக் கொள்ள கெட்டிமேளம் இசைத்தது.

 

 

முதல் பாகம் –முற்றும்- தொடரும்…

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக